மனிதர் முகம் தெரியும் பொழுது
மனம் அதிர்கிறது
ஏன் நினைக்கவில்லை
எது கண்ணை மறைத்தது
முட்கள் இருக்கின்றன
மலர்கள் இருக்கின்றன
ஒன்றை வேறொன்றாக பார்த்தால்
பார்வையில் தான் கோளாறு
தவறொன்றும் செய்யவில்லை
ஏன் இந்த அபகரிப்பு
எப்படி நிகழ்ந்தது
அர்த்தமற்ற கேள்விகள்
நியாயம் நம்பிக்கை . . . நேசம்
வழக்கொழிந்த வார்த்தைகள்
எந்த உலகில் இருக்கிறாய் நீ
விழித்துக்கொள்
No comments:
Post a Comment