Tuesday, 27 December 2011

 மனிதர் முகம் தெரியும் பொழுது
மனம் அதிர்கிறது
ஏன் நினைக்கவில்லை
எது கண்ணை மறைத்தது

முட்கள் இருக்கின்றன 
 மலர்கள் இருக்கின்றன 
ஒன்றை வேறொன்றாக பார்த்தால்
பார்வையில் தான் கோளாறு 

தவறொன்றும் செய்யவில்லை
ஏன் இந்த அபகரிப்பு 
எப்படி நிகழ்ந்தது 
அர்த்தமற்ற கேள்விகள் 


நியாயம் நம்பிக்கை . . . நேசம் 
வழக்கொழிந்த வார்த்தைகள் 
எந்த உலகில் இருக்கிறாய் நீ 
விழித்துக்கொள்  

No comments:

Post a Comment