Thursday, 15 December 2011

என்னவாயிற்று



பசி எடுக்கிறது பரபரவென்று
பிடித்ததை எல்லாம்  எடுத்த கணமே
ருசிக்கவில்லை பசியும் இல்லை


இனிய ஓசை தொலைவில் கேட்கிறது
இசையில் மனதை நிலை நிறுத்தினால்
திமிரும் குதிரையாய் அலைபாய்கிறது


விடிந்தும் விடியா வைகறைப் பொழுதில்
மலைச் சாரலில் மெதுவாய் நடந்தால்
படுக்கையின் சுகமே நிழலாடுகிறது


தொலைதூர இரயிலின் குரலோ
சலசலக்கும் ஆற்றின் ஒலியோ
பிறிதொரு சப்தமாய் தெரிவேதேனோ


காலம் கரைகிறது கற்பூரமாய்
கையில் பிடித்து நிறுத்தப் பார்த்தால்
உள்ளங்கையில் ஒன்றுமில்லை



என்னவாயிற்று எனக்கு என்று
இரு கண் மூடி யோசித்தால்
வயதாகிவிட்டது, ஆம் வயதாகிவிட்டது.




No comments:

Post a Comment