Saturday, 10 December 2011




மேகப்பொதியாய் மலையை வருடி 
பன்னீர்த் துளியாய் மண்ணில் உதிர்ந்து
உள்ளங்காலை சில்லென நனைத்து  
காரையாராய்ப் பிறந்த ஓடை 

முண்டந்துறையின் முகப்பில் பாயும் 
சேர்வலாற்றின் கரம் பிடித்து
பாபநாச சிவனைச் சுற்றும் 
பளிங்கு நீராம் தாமிரபரணி.

பொங்கிப்பெருகும் காவிரி வேண்டாம்
ஆழ்ந்த அகண்ட கங்கை வேண்டாம்

கூழாம் கற்களைத்  தழுவி ஓடும் 
மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆறே

ஆறெனத்தோன்றும்
என்றும் எனக்கு 
 

2 comments: