Friday, 4 January 2013


 இயல்பு திரும்புமா 

பயணம் 
திடீரென்று அறிவிக்கப்பட்டது
அறியாத பாதை
ஆயின் அச்சமில்லை 

மேஜையை ஒதுக்கவும் 
சேர்த்து வைத்திருந்த சில பொருட்களை 
வகைப்படுத்தவும் நேரமின்றி போனபொழுது 
எண்ணங்களைக் கோர்த்தேன் 
மனம் சலனமற்று போனது.

விடைபெற சரியான தருணம்  
 வேலை ஒன்றும் மீதமில்லை
அப்படியே இருந்தாலும் அவை 
நான் இன்றி நன்றாகவே நடைபெறும்
நல்ல இளைப்பாறல் 
இனி போகலாம் என்றே நினைத்தேன்
ஏனோ தடங்கல் 

முதுவேனிற் காலம் நீள்கிறது.
பார்வை மாறிவிட்டது 
இயல்பு திரும்புமா 
தேவையில்லையோ  


No comments:

Post a Comment