Monday, 14 May 2012

ஏன் இப்படி

எங்கள் பன்னீர் மரம் தென்னை மரங்களை விட உயரமானது 
நெடு நெடுவென்று இன்று நிமிர்ந்து நிற்கிறது 
வீடு கட்டியவுடன் வைத்த  கன்று 

நான்கடி உயரமே இருக்கும்பொழுது இடுப்பு முறிந்து 
காலுறை வைத்து என் மக்கள் இறுக்கி கட்டியதால் 
மீண்டும் வளர்ந்து 
இன்று பெய் மழை போல் பூக்களை பொழிகிறது 
தெருவிலும் தன கரங்களை நீட்டி வெண்கம்பளம் விரிக்கிறது 

பொத்தி பாதுகாக்கும் சரக்கொன்றை மரமோ 
கை தொடும் உயரத்தில் நின்று நகைக்கிறது 
வாடி வதங்கி பின் தளிர் விட்டு மறுபடியும் 
வாடி வதங்கி சின்னஞ்சிறு முளை விட்டு . . .

இரு மரங்களும்  ஒரே வருடம் வைத்தது தான் 
ஏன் இப்படி என்று யோசிக்கிறேன் 

No comments:

Post a Comment