Friday 16 August 2013

There was a little girl
who loved the stars and the velvet skies
And walked with her father under towering trees
Where the manthis swung
Lithe and black, from branch to branch

She traipsed down mountain paths
Collecting ferns, picking berries
A rare raspberry but wild fruit often
With the shallow rivulets tickling her toes

Her father would bend down and tick off an attai
the slimy parasite that dared climb her shoes

Her father, in his hunter boots and woolen stockings
His congol that sat on a well set head
And his shotgun in hand
That she sometimes held with pride


A child lives inside each one of us
Tucked away under layers of decades
She lies there with a smug smile, safely hidden
Take care not to smother her
Completely

Friday 4 January 2013


நல்ல இசை
மெதுவாக நடக்கத் துவங்கி, விறுவிறுவென்று படியில் ஏறி 
நர்த்தனமாடிஸ்வரங்களில் திளைத்து
உச்சத்தைத் தொட்டு மீளும் சுகம் . . .

ஆணியடித்து நிற்க வைக்கும் ஓவியங்கள்
ஒரு அஸ்த்தமன  பொழுதின் ஆழத்திற்குள் 
ஒரு சில கணங்களில் 
நம்மை இழுத்துக் கொள்ளும் திறன் . . .

அதிரவைக்கும் 
நிலை நிறுத்தும்
எழுத்தின் வீச்சு . . .
கலைஞர்கள் இல்லையெனில் 
மானுடம் என்னாவது?

மெலிதாக ஆடும் ஊஞ்சலும் வேப்பமரக் காற்றும்
கனமில்லாத எழுதுகோலும் 
வேறென்ன வேண்டும் வாழ்வில்
 சுயநலம் தான். மறுக்கவில்லை
ஆனால்
நான் யார் உயிரையும் எடுக்கவில்லை
யார் கனவையும் நசுக்கவில்லை
யார் நிலத்தையும் பறிக்கவில்லை

என் வழியே நான் 

 இயல்பு திரும்புமா 

பயணம் 
திடீரென்று அறிவிக்கப்பட்டது
அறியாத பாதை
ஆயின் அச்சமில்லை 

மேஜையை ஒதுக்கவும் 
சேர்த்து வைத்திருந்த சில பொருட்களை 
வகைப்படுத்தவும் நேரமின்றி போனபொழுது 
எண்ணங்களைக் கோர்த்தேன் 
மனம் சலனமற்று போனது.

விடைபெற சரியான தருணம்  
 வேலை ஒன்றும் மீதமில்லை
அப்படியே இருந்தாலும் அவை 
நான் இன்றி நன்றாகவே நடைபெறும்
நல்ல இளைப்பாறல் 
இனி போகலாம் என்றே நினைத்தேன்
ஏனோ தடங்கல் 

முதுவேனிற் காலம் நீள்கிறது.
பார்வை மாறிவிட்டது 
இயல்பு திரும்புமா 
தேவையில்லையோ  




விரயமானது என்ன?

சினம் எனும் சிலம்பு 
என்று கழன்று கொள்ளும்?
கர்ணனின் கவசக்குண்டலமா 
உதிரம் கொட்ட அரிந்துவிட . . . 

விரயமானது என்ன?
கை நழுவிய நாணயங்களா 
கட்டிக் காத்த மௌனமா 

. . . . .ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு 


Thursday 3 January 2013



தூத்துக்குடி 

அம்மாவின் கை மண ம் வலையை மீறி மணக்கிறதே 
மின் வலையை, மீன் வலையை 
 சிறு பருவ நினைவலையை   

பாசியும் கடல் பஞ்சும் சிதறிக்கிடக்கும் 
அந்த அரவமற்ற கடற்கரையும்
அமானுஷ்ய பன ங் காடுகளும் 
சரசர க்கும் ஓலைகளில் பொதிந்திருக்கும் 
எத்தனையோ ரகசியங்களும் 
கண்ணீர் துளிகளும், இரத்தக்களறி யும் 

என் பிறந்த மண் 

Wednesday 5 December 2012

அலைக்குமிழ்

உறவுகள் விளிம்பில் நிற்கின்றன. 

அவ்வாறே இருக்கட்டும் 

நெருக்கம் தவிர் இறுக்கம் தவிர் 
மெல்லிய சிறு சிறு வலை பின்னி 
அதனுள் அமர்ந்துகொள் 
ஒரு சிலர், வெகு சிலர் உடனிருந்தால் போதும் 

நிற்க 
 வலையும் ஒருநாள் அவிழும் 
காற்றினில் கரையும் 
அலைக்குமிழ் வெடித்து 
ஆழ்கடல் புகும்  

நேரம் 

இது ஒரு நல்ல சேலை என்று 
விரல்களால் நீவிவிட்டு 
திருப்தியாக மடித்து வைப்பது போல் 

இது ஒரு நல்ல நட்பு 
என்று சில கணங்களை மனதில் நிறுத்தி 
சிலாகிப்பது போல் 

இது ஒரு நல்ல பாடல் என்று 
வரிகளை மனதில் ஒட்டி
ரசித்து மகிழ்வது போல் 

இது ஒரு நல்ல வாழ்க்கை என்று 
விலகி நின்று பார்க்கும் 
நேரம் நெருங்கி விட்டது